கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை மட்கான் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:45 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் அந்த ரயில் சுமார் மாலை 6:30 மணிக்கு மும்பையை வந்தடையும்.
மட்கான் ரயில் நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மும்பை-கோவா இடையே வழக்கமான ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த ரயில் வெள்ளிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் இந்தியாவின் 19 வது அரை-அதிவேக வந்தே பாரத் ரயிலைக் குறிக்கிறது. மும்பையிலிருந்து இயக்கப்படும் நான்காவது மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து இயக்கப்படும் ஐந்தாவது ரயிலாகும்.
முன்னதாக, மே 29 அன்று, பிரதமர் மோடி காணொளி மூலம் அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய சேவையானது குவஹாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையேயான 411 கிமீ தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025