மும்பையில் ரூ.29,000 திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி ..!

PM Modi

மோடி : இன்று மாலை ரூ.29,000 கோடி திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி மும்பை செல்கிறார்.

இன்று (ஜூலை-13) மாலை 5.30 மணி அளவிற்கு மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.29,400 கோடி மதிப்பிலான சாலை, ரெயில்வே மற்றும் துறைமுகங்கள் ஆகிய துறைகள் தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட போகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ரூ.16.600 கோடி மதிப்பிலான தானே-போரிவலி சுரங்கப்பாதை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த இரட்டை குழாய் சுரங்கப்பாதை திட்டத்தின் மொத்த நீளம் 11.8 கி.மீ. ஆகும். இது தானேவிலிருந்து போரிவலி திட்டத்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட பயண நேரத்தில் சுமார் 1 மணி நேரம் குறைக்கும்.

மேலும், ரூ. 6,300 கோடி மதிப்பிலான கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலையில் சுரங்கப்பாதை ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இதனது மொத்த நீளம் சுமார் 6.65 கி.மீ ஆகும். இது நவி மும்பை மற்றும் புனே மும்பை விரைவுச்சாலையில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையத்துடன் புறநகர்ப் பகுதிகளுக்கு நேரடி இணைப்பை வழங்கும் திட்டமாகும்.

அடுத்ததாக சுமார் ரூ.5600 கோடி ஒதுக்கீட்டில் முதல்-அமைச்சர் யுவ காரிய பிரசிஷன் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் என்பது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும் திட்டமாகும். அதன் பிறகு மோடி இரவு 7 மணி அளவில் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் G -பிளாக்கில் உள்ள இந்திய செய்தி சேவை செயலகத்திற்கு சென்று ஐ.என்.எஸ் கோபுரங்களையும் (INS Tower) திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar