இன்று மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி வெற்றிபெற்றது. மொத்தம் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் சிகிச்சை பெற்று, மே 22 வரை வீட்டில் தனிமையில் இருந்தார்.
இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் 50 நாட்களுக்கு பின் புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் கடந்த 23ஆம் தேதி வழங்கினார். இது குறித்து கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறுகையில், முதல்வர் ரங்கசாமி அளித்த அமைச்சரவை பட்டியல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உள்துறை அனுமதி பெற்றபின் வரும் 27-ஆம் தேதி மதியம் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று, மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…