பிரதமர் மோடி மான் கி பாத் என்பதற்கு பதிலாக பெட்ரோல் கி பாத் அல்லது டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து பாபுல் சுப்ரியோ அவர்கள் நீக்கப்பட்டுள்ள நிகழ்வு மூலம் வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்து கொண்டது என்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கு நான் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தினமும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், பிரதமர் மான் கி பாத் (மனதின் குரல் ) நடத்துவதில் மட்டுமே மும்முரமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவர் பெட்ரோல் கி பாத், டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரவை குறித்து நான் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…