ராகுல் காந்தி இன்று கேரளா வருகை: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் . காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார்.ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கேரளா மாநிலம் கோழிக்கோடு வருகிறார். அவர் வயநாடு தொகுதியில் தங்கியிருந்து 2 நாட்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025