ராகுல் காந்தி விளக்கம்..ட்விட்டர் பதிவை நீக்கிய கபில் சிபில்..!

Default Image

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாககாங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக கூறப்பட்டது. இதனால், ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து, கடிதம் எழுதியதற்காகவே பாஜகவுடன் தொடர்பு என குற்றம்சாட்டுவதா..? 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டது கிடையாது என கபில் சிபில்  தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டார். இதற்கிடையில், குலாம் நபி ஆசாத் “ராகுல் காந்தி தனது கூற்றை நிரூபித்தால் நிரூபித்தால் பதவி விலக தயார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்கள் என நான் கூறவில்லை என்று ராகுல் விளக்கமளித்தார். ராகுல் காந்தி விளக்கம் அளித்ததை தொடர்ந்து தொடர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவை  கபில் சிபில் நீக்கி உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT