அங்க உனக்கு மரியாதை கிடைக்காது..கொள்கையை மறந்துவிட்டாய்..கொட்டி தீர்த்த ராகுல்

Published by
kavitha

அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்த்தின் காரணமாக தனது கொள்கையை ஜோதிராதித்யா சிந்தியா மறந்து விட்டார்,என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் ஜோதிராதித்யா சிந்தியா சொல்வதற்கும், அவருடைய மனதில் உள்ளதற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. சிந்தியா எனது பழைய நண்பர். அவருக்கு அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் சந்தேகத்தால், தனது கொள்கையை மறந்துவிட்டார். பா.ஜக கட்சியில் சிந்தியாவுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது, திருப்தியும் ஏற்படாது. என்று கூறிய ராகுல் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மோடி அரசால் நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்து விட்டது. இது எல்லாம் சுனாமியின் ஆரம்பம்தான். பொருளாதார நிலையை இன்னும் மோசமாக போகும். பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனக்கோ பொருளாதாரம் புரியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை, கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. அரசினுடைய நடவடிக்கை ஏற்கனவே தாமதமாக உள்ள நிலையில்  வைரஸ் பாதிப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.

Recent Posts

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

1 hour ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 hours ago