மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளிலும்144 தடை உத்தரவு உள்ளது.
இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல மாநிலங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு கோடிகணக்கில் பொருள்கள் சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அதில் கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டலத்தில் ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் ரூ.3 கோடி அளவில் சொத்துகள் சேதம் அடைந்து உள்ளது என இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…