ரெயில்வே துறை.! குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரூ.88 கோடி இழப்பு.!

Published by
murugan
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடிக்கு பொருள்கள் சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது.
  • அதில் கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டலத்தில்  ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் ரெயில்வேவிற்கு ரூ.3 கோடி அளவில் சேதம் அடைந்து உள்ளது

மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து  நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்  தீவிரம் அடைந்து உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளிலும்144 தடை உத்தரவு உள்ளது.

இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல மாநிலங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு கோடிகணக்கில் பொருள்கள் சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அதில் கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டலத்தில்  ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் ரூ.3 கோடி அளவில் சொத்துகள் சேதம் அடைந்து உள்ளது  என இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

18 minutes ago

டாஸ்மாக் ரெய்டுக்கு மத்தியில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…

28 minutes ago

ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…

55 minutes ago

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

1 hour ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

1 hour ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

2 hours ago