மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என கூறியிருந்தார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என காலக்கெடு கொடுத்திருந்தார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே ஒன்றாம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதன்கிழமை மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் எல்லாம் அகற்றப்படாத பட்சத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமான் பாடல் ரெட்டை ஒலியில் ஒலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து உலவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றுடன் ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மசூதிக்கு வெளியே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…