முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரத்தன் டாடா.! பலரும் பாராட்டு.!

Ratan Tata, a well-known Indian businessman, has searched the house of a former employee who was suffering from poor health.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியரை வீடு தேடி சென்று நலம் விசாரித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

83 வயதான இவர் டாடா குழுமம் நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்த பிறகு தற்போது அறக்கட்டளை பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக மும்பையில் இருந்து புனே சென்ற ரத்தன் டாடா, வீட்டில் இருந்த அவரை நேரில் சென்று நலம்விசாரித்தார்.

ரத்தன் டாடாவின் வருகையை எதிர்பாராத அந்த ஊழியரின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். முன்னாள் ஊழியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று சந்தித்து நலம் விசாரித்த முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இந்தச் செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தியாவின் பிரபல தொழிலதிபராக திகழ்பவர் ரத்தன் டாடா, ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பலருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலம் உதவிகளைச் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.