மேற்கு வங்கம்: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. நாளை (ஜூன் 4) மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வந்தது. இருந்தும் சில இடங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை முன்னதே மேற்கு வங்க தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பராசத் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேகங்கா சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்களிலும், மதுராபூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் காக்டிவிப் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில வாக்கு சாவடிகளிலும் ஜூன் 1இல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது.
இந்த மறுவாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையால் நின்று வாக்களித்து வருகின்றனர். வழக்கம் போல மாலை 6 மணி வரை இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…