Sabarimala Ayyappan Temple [File Image]
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் (ஒரு மண்டலம்) கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வழக்கத்தை விட இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மண்டல பூஜையன்று மட்டும் பக்த்ர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையானது 70 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.
அதனை அடுத்து மகரஜோதி தரிசனத்திற்காக, மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது இன்று (டிசம்பர் 30) மாலை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை சபரிமலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை (டிசம்பர் 31) முதல் வழக்கம் போல பக்த்ர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஜனவரி 15 ஆம் தேதி, தை 1ஆம் நாள் மகர ஜோதி பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும். இந்த நிகழ்வானது சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்கள் வருகையை காண்பதாக ஐதீகம். அதற்க்கடுத்து ஜனவரி 20ஆம் தேதி வரையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இரவு ஹரிவராசனம் நிறைவு பெற்ற பின்னர் நடை சாத்தப்படும்.
மீண்டும் ஒவ்வொரு தமிழ் மதமும் முதல் 5 நாட்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்த்ர்கள் வருகைக்காக திறக்கப்படும். அப்போது பக்க்தர்கள் சிறுவழிப்பாதை (பம்பை) வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெருவழி எனும் காட்டுப்பாதை கார்த்திகை, மார்கழி என இரு மாதங்களுக்கு மட்டுமே திறந்து இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
மகர ஜோதி தரிசனதிற்க்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கோயில் வளாகம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி உள்ளிட்ட கோயில் பகுதிகள் அனைத்தும் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்படுகின்றன.
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…