கொரோனா தொற்று குறைந்துவரும் பகுதிகளில் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, இந்திய குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக காணப்படுவதாகவும், கொரோனா தொற்று குறைந்துவரும் பகுதிகளில் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…