செப்டம்பர் 1 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் 50% மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பங்கு பெற வழிவகை செய்துள்ளனர்.
மேலும், காலை 7.30 மணி முதல் 12.30 மணி மற்றும் 12.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டு பிரிவுகளாக 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும். அதேபோல், காலை 8 மணி முதல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 6 மணி வரை 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே வர வேண்டும்.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…