seat belt alarm stopper clips [File Image]
கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்யும் ஐந்து இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறியதைக் கருத்தில் கொண்டு, கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்யும் முதல் ஐந்து ஆன்லைன் விற்பனைத் தளங்களுக்கு தடை விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் பொழுது ஒருவித பீப் சத்தம் ஏற்படும். இந்த சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் எனப்படும் கிளிப்புகள் பீப் சத்தத்தை அமைதிப்படுத்தி விடுகின்றன. இதனால் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலும் பீப் சத்தம் ஏற்படாததால் பயணிகள் சீட் பெல்ட் அணிந்தது போல எண்ணி பயணம் செய்கின்றனர்.
இதனால் காரில் பயணம் செய்பவர்கள் பலவித ஆபத்தில் சிக்கி தங்களது உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய அபாயகரமான சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் பல விதமான ஆன்லைன் விற்பனைத் தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்பர்களை விற்பனை செய்யும் Flipcart, Amazan, Meesho, Snapdeal, Shopclues உள்ளிட்ட முதல் ஐந்து இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதி 138-ன் படி சீட் பெல்ட் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், சீட் பெல்ட் அணியாதபோது இந்த கிளிப்புகள் பீப்பை நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதுபோன்ற பொருட்களின் ஆன்லைன் விற்பனையானது பாதுகாப்பற்றதாகவும், நுகர்வோரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக முடியும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…