இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது உத்தரப்பிரதேச காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனால் ஹத்தாரஸ் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஹத்தாரஸ் ஏற்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் டெல்லி காவல்துறை இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் அனுமதியுடன் ஜந்தர் மந்தரில் 100 பேர் வரை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…