#Shock:’உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்’ – அதிகாரியால் தற்கொலை செய்த மின்ஊழியர்!

Published by
Edison

உ.பி:’உங்களுக்கு இடமாற்றம் வேண்டுமானால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்’ என்று கேட்ட அதிகாரியால் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில்,தனது மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்று கூறிய பொறியாளரின் வீட்டிற்கு வெளியே மின் கழக ஊழியர் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார்.

உபி காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி,லக்கிம்பூரின் மின்துறையில் பணிபுரியும் மின் ஊழியரான கோகுல் (42) என்பவர், வேலைக்கு சென்று வர தனக்கு அதிக நேரம் ஆவதால் தனது ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர ஷர்மாவிடம் இடமாற்றம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால்,லைன்மேன் கோகுலிடம்,பணி இடமாற்றத்திற்காக ரூ.1 லட்சம் தருமாறு ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர ஷர்மா கேட்டுள்ளதாகவும், அது முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்றும் கேட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த மின் ஊழியர் கோகுல்,இன்ஜினியர் நாகேந்திர ஷர்மாவின் வீட்டிற்கு வெளியே தீக்குளித்துள்ளார்.இதனையடுத்து,அவர் லக்கிம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டார்,எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்,தனது அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை சுமத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. மேலும்,கோகுலின் மனைவி,அதிகாரிதான் தனது கணவர் இறப்பிற்கு காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால்,ஜூனியர் இன்ஜினியர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.

இதனையடுத்து,கோகுலின் வாக்கு மூல வீடியோவை அறிந்த மாவட்ட நீதிபதி மகேந்திர பகதூர் சிங், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜெகத்பாலை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.

மேலும்,இந்த வழக்கில் 3 பேர் கொண்ட குழுவால் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.அதன்படி,இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை இக்குழு ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

4 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

12 hours ago