கடந்த 2012 ஆம் ஆண்டு மனநலம் குன்றிய 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இரண்டு பேர் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே, மற்றொரு நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மும்பை போக்ஸோ நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை என்பது கொலையை வீட்டா கொடூரமானது. ஏனென்றால் பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் ஆன்மாவையே அது அழித்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.