மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
34 வயதான ஆஷிஷ், மூத்த நகல் ஆசிரியர், புதுதில்லியில் ஒரு முன்னணி செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆஷிஷ் யெச்சூரி. ஆரம்பத்தில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், பின்னர் குர்கானுக்கு மாற்றப்பட்டார்.
இரண்டு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆஷிஷ் யெச்சூரியன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு தான் மிகுந்த வலியும் வேதனை அடைந்ததாகவும், மகனை இழந்து வாடக்கூடிய சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…