கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்பொழுது பேசிய அவர், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று தமிழகம், தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. இதன் காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள், எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய அவர், மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு 24.38 ரூபாயாகவும், மாநிலத்துக்கு 22.37 ரூபாயாகவும், பெட்ரோல் விலை மத்திய வரியாக 31.58 ரூபாயாகவும், மாநில வாரியாக 32.55 ரூபாயாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாநில அரசால் தான் என்று கூறுவதில் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக 15% ஜிஎஸ்டியை மகாராஷ்டிரா தான் வசூலிக்கிறது. நேரடி வரி மற்றும் ஜிஎஸ்டி இரண்டையும் சேர்த்தாலும், நாட்டிலேயே அதிகபட்சமாக வரி வசூலிப்பதில் மகாராஷ்டிரா தான் முதல் இடத்தில் உள்ளது என்றும் மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…