ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மாநில அரசுகள் அவசர எண்களை அறிவித்துள்ளன.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், பெங்களூருவில் இருந்து சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 900க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை பற்றி அறியவும், விபத்து தொடர்பான வேறு உதவிகள் தொடர்பாகவும் மாநில அரசுகள் உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் – ஹவுரா:033 – 26382217
மேற்கு வங்க மாநிலம் -கரக்பூர்:8972073925, 9332392339
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார்:9903370746
ஒடிசா மாநிலம் – பாலாசோர்:8249591559, 7978418322
சென்னை சென்ட்ரல்:044- 25330952, 044-25330953 & 044-2535477
