மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேருவதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து புதுக்கோட்டை மாணவி ராஜஸ்ரீ என்பவர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழக்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காரணத்தினால், முந்தைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…