மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேருவதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து புதுக்கோட்டை மாணவி ராஜஸ்ரீ என்பவர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழக்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காரணத்தினால், முந்தைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…