Categories: இந்தியா

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Published by
மணிகண்டன்

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் , ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அவர்  டெல்லி திகார் சிறையில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றிய தங்கள் கருத்துக்களை கூறினர்.

உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறுகையில், இந்த வழக்கு நிறைவடைய நீண்ட கால அவகாசம் தேவைப்படும். ஆனால், அதற்குள் டெல்லியில் தேர்தலும் நடைபெற உள்ளது. அதனால், கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் என்று வாய்மொழியாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியது .

எவ்வாறாயினும், இறுதியாக நாங்கள் எதையும் முடிவு செய்யவில்லை. எழுத்துபூர்வமாக இதனை நாங்கள் பதிவிடவில்லை. வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால், இடைக்கால நிவாரணமாக ஜாமீன் வழங்க பரிசீலிக்கப்படலாம் என்பதை மட்டுமே நாங்கள் கூறுகிறோம்

இதனை எங்கள் கருத்துக்களாகவோ அல்லது அறிவுறுத்தல்களாகவோ எடுத்துக் கொள்ளுங்கள். ஜாமீன் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் இன்னும் இது பற்றி அவர் கூறவில்லை . அவர் கேட்காமல் இதுபற்றிய வாதத்தை தொடங்க வேண்டாம் என கூறி வழக்கை வரும் மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

டெல்லியில் உள்ள மொத்தம் 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 6ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

1 hour ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

2 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

3 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

3 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

4 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

5 hours ago