மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.
நீண்ட நாட்களாக குழப்பம் நிலவி வந்த மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது .இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த கடிதம், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை இன்று தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் இன்று ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து இரு தரப்புகளில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.அரசு தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், 170 எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்; ஆவணங்கள் அடிப்படையிலேயே ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் என்று வாதிட்டார்.
காங்கிரஸ் -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர்.அப்பொழுது ,கபில் சிபில் வாதிடுகையில், அவசர அவசரமாக ஆட்சியமைத்த ஃபட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது என்று வாதிட்டார். மேலும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார். இறுதியாக மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…