தாய்லாந்தில் பலியான இந்திய பெண் என்ஜினீயர்..! பாஸ்போர்ட் இல்லாததால் தவிக்கும் குடும்பம்..!

Published by
murugan

மத்திய பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரக்யா பலிவால் (29).இவர் சாப்ட்வேர் இன்ஜினீயாராக பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் தாய்லாந்தில் உள்ள புக்கட்டில் நடைபெறும்.
இதற்காக பிரக்யா சென்றிருந்தார். இவருடன் இன்னும் சில பேர் சென்று இருந்தனர். அங்கு நடந்த கார் விபத்தில் பிரக்யா பலியானார். இவரின் உடலை புக்கட்டில் உள்ள படாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இவரது தோழிகள் பிரக்யா பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பிரக்யா குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால் தாய்லாந்து சென்று மகளை எப்படி பெறுவது என தவித்தனர். இதையடுத்து அந்த தொகுதி எம்.எல்.ஏ அலோக் சதுர்வேதி உதவி நாடினர்.
அவர் உடனடியாக முதலமைச்சர் கமல்நாத் இடம் கூறினார். முதலமைச்சர் கமல்நாத் அனைத்து உதவியும் செய்து தருவதாக கூறி மத்திய அரசுக்கு தகவல் கூறினார். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , பாங்காங்கில் உள்ள இந்தியத் தூதரகம் பிரக்யா உடலை இந்தியா கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…

38 minutes ago

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

5 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

5 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

6 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

6 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

7 hours ago