9 ஆண்டுகள்.. 9 கேள்விகள்… பாஜகவுக்கு எதிராக சரமாரியான கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்.!

Published by
மணிகண்டன்

பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 9 ஆண்டுகள் 9 கேள்விகள் என ஒரு கையேட்டினை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல் முதலாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அதற்கு பிறகு மீண்டும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்த வருடத்தோடு ஒன்பது வருடங்களாக பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த ஆட்சி காலத்தில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி 9 ஆண்டுகள் 9 கேள்விகள் என ஒரு கையேடு ஒன்றை தயாரித்து வெளியிட்டு உள்ளது.

  • இதனை நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். அப்போது பொருளாதாரம் ,  சீன எல்லை விவகாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சமூக நீதி, விவசாயிகள் போராட்டம் என ஒன்பது வகையான விவகாரங்களை பட்டியலிட்டு ‘9 ஆண்டுகள் 9 கேள்விகள்’ என்ற தலைப்பில் அந்த கையேடு தயாராகி உள்ளது.
  • பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை பணவீக்கமும், வேலையின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது ஏன்.?
  • விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்.?
  • எல்.ஐ.சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவைகளில் இருந்த மக்கள் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் கொடுத்தது எதற்காக.?
  • பாஜக ஆளும் மாநிலங்களின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.?
  • இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. தேர்தல் சமயத்தின் போது மட்டும் வெறுப்பு அரசுகளை கையில் எடுப்பது எதற்காக.?
  • தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான தொடர் தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்.?
  • பணபலத்தை வைத்துக் கொண்டு பல்வேறு மாநிலங்களில் ஆளும்கட்சி அரசுகளை கவிழ்ப்பது ஏன்.?
  • அரசியல் சட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது எதற்காக.?
  • கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் ஏன் வழங்கவில்லை.?

இவ்வாறு ஒன்பது கேள்விகளை எழுப்பி இதற்கு பிரதமர் மோடி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் எனவும் இந்த கேள்விகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவோம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டு கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago