வெள்ளத்தால் பலி எண்ணிக்கை அசாமில் 107 பேர்,பீகாரில் 11 பேர் ஆக உயர்ந்துள்ளது.!

Published by
கெளதம்

வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அசாமில் 107 ஆகவும் பீகாரில் 11 ஆகவும் உயர்ந்துள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மற்றும் அசாம் ஆகிய இரண்டும் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. தற்போது பேரழிவு தரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார்:

சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, கோசி உட்பட இங்குள்ள கிட்டத்தட்ட பெரிய ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் மாநிலத்தில் நிரம்பி வழிகின்றன என்பதால் மாநிலத்தின் 38 மாவட்டங்கள் வெள்ளத்தினால் இதுவரை 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 11 பேர் உயிர் இழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் 19 நிவாரண முகாம்களில் 25,000 க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பராமரிக்க 989 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் மாநில பேரிடர் மறுமொழிப் படை மற்றும் தேசிய பேரிடர் மறுமொழிப் படை கொண்டு இந்த மீட்டு பணியில் குறைந்தது 22 அணிகளை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி வருகிறது.

இதற்கிடையில், அசாமில் இதுவரை 107 பேர் வெள்ளத்தில் இறந்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 208 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலும்,மாநிலத்தில் கிட்டத்தட்ட 93,000 ஹெக்டேர் பயிர் இன்னும் நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளம் மற்றும் கொரோனா தவிர, நிலச்சரிவுகளுடன் அம்மாநிலம் போராடி வருகிறது. மே மாதத்திலிருந்து, இங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

19 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

22 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago