மேற்கு வங்கத்தில், ஒரு கிராமத்தில் வசித்த தாய் மற்றும் மகள்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி விரட்டியடிக்கப்பட்டனர். இதனையடுத்து, அந்த குடும்பம் வேறு கிராமத்தில் குடிபெயர்ந்தது. இந்நிலையில், தனது சொந்த கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை தாங்க முடியாத அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் சுர்கி, வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார்.
இதுகுறித்து அப்பெண் கூறுகையில், தனது 10 வயதில் அந்த கிராமத்தினரால், தனது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைவு கூர்ந்தார். பெண் குழந்தைகளை படிக்க வைத்ததால், தனது தாயை சூனியக்காரி என முத்திரை குத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், கிராமமே கொரோனாவால் மூச்சுத்திணறும் நிலையில், அவர்கள் செய்த கொடுமைகளை மறந்து, கிராம மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்து உதவி வருவதற்காக தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…