கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பின் அளவு அதிகம் காணப்பட்டதால், டெல்லியிலுள்ள மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டெல்லியில் கோவாக்சின் தடுப்பூசி குறைவாக இருப்பதால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை கோவாக்சின் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது மே மாதம் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்த மாதத்தில் இரண்டாம் தவணை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மட்டும் இனி இரண்டாம் தவணையாக கோவாக்சின் செலுத்தப்படும் எனவும், முதல் தவணையாக இனி யாருக்கும் தடுப்பூசியை கொடுக்க வேண்டாம் எனவும் டெல்லியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அறிவுறுத்தியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…