Manipur Riots [Image source : PTI]
கலவரம் தொடர்பாக வேலைக்கு வரவில்லை என்றால் உரிய விளக்கம் தரவேண்டும் என மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்களாகியும் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பாமல் அங்கங்கே கலவரம் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக பலர் பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர். அரசு ஊழியர்களும் அடங்குவர்.
இதுகுறித்து தான் ஓர் தகவல் பரவி வருகிறது. அதாவது, மணிப்பூர் மாநில அரசு, ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் ஊதியம் தரமுடியாது என்ற நிலைக்கு வரலாம் என கூறப்படுகிறது. மேலும் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக பணிக்கு திரும்ப முடியாதவர்கள் வரும் 28ஆம் தேத்தித்குள் அந்தந்த ஊழியர்களின் தலைமைக்கு பணிக்கு வர இயலாத காரணத்தை கூற வேண்டும் என்றும், இல்லையென்றால் ஊதியம் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர் .
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…