புரேவியை தொடர்ந்து நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

According to the Meteorological Department, a new depression will form tomorrow following the Puravi storm.

புரேவி புயலைத் தொடர்ந்து நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் இலங்கையில் இரவு கரையை கடந்த நிலையில், பாம்பனில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்றவர்களுக்கு திரும்பவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் புயலை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தென்தமிழகத்தில் தயாராக உள்ளனர். நிவர் புயல் பாதிப்பே இன்னும் முழுமையாக சரி கட்டப்படாமல் இருக்கிறது. இருப்பினும் அடுத்ததாக புரேவி புயலை எதிர்கொள்ள தயாராக இருந்தாலும், தற்போது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.