துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது.
இதன்காரணமாக,அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு காலதாமதமாகி வருகிறது. இதற்கிடையில்,பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏ ஆக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால்,முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. பின்னர், முதல்வர் ரங்கசாமியிடம்,தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்துக்கு முதல்வர் ரங்கசாமி பணிந்துள்ளதாகவும்,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,பாஜகவில் இருந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சிக்குள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன்பின்னர்,பதவிகளுக்கான பெயர் பட்டியல் தயாரானது.
இந்நிலையில்,இந்த பெயர் பட்டியலை,முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு,பாஜக மேலிட பொறுப்பாளர் எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜகவினர் தற்போது வருகை புரிந்தனர்.
அதன்பின்னர்,சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான பெயர்பட்டியலை குறித்து பேசாமல்,துணை முதல்வர் பதவி,இலக்கா பங்கீடு தொடர்பாக எம்.பி.ராஜூ சந்திரசேகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால்,முதல்வர் ரங்கசாமி கடும் கோபம் கொண்டார்.
இதனையடுத்து எம்.பி.ராஜூ சந்திரசேகரிடம்,’இது தொடர்பாக நீங்கள் என்னிடம் பேசக்கூடாது,ஏனெனில்,டெல்லியில் இருக்கும் உங்கள் தலைவர் அமித்ஷாவிடம் நான் ஏற்கனவே பேசிவிட்டேன்”,என்று திட்டவட்டமாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.
மேலும்,துணை முதல்வர் பதவி கிடயாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனால், ஏமாற்றத்துடன் பாஜகவினர் திரும்பினர்.இதன்காரணமாக, துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…