women beaten with a stick [File Image]
மத்தியப் பிரதேசம் : மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாண்டா பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், கொடுமையான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயற்சி செய்வதற்கு பதிலாக தாக்குதலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அடையாளம் தெரியாத பெண் ஒருவரை முகத்தை முடி வைத்துவிட்டு ஒரு சிலர் கையை பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் கையில் வைத்து இருந்த கட்டையை வைத்து அந்த பெண்ணை தாக்கினார். வலியை தாங்கமுடியாமல் துடித்த அந்த பெண் நெளிந்துகொண்டு இருந்தார். இருந்தாலும், அந்த நபர் தொடர்ச்சியாக பெண்ணை தாக்கி கொண்டு இருந்தார்.
இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வந்த நிலையில், இதுகுறித்து தார் போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணை தாக்கிய அந்த நபர் கைது செய்யப்பட்டார் எனவும் தார் காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் தகவலை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அவர் ” முக்கிய குற்றவாளி கோக்ரி தானா கந்த்வானியில் வசிக்கும் நிர்சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் வீடியோவில் காணப்படும் மற்ற நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வன்முறைச் செயல் கண்டிக்கத்தக்கது, மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…