ரெயின் கோட் என நினைத்து பிபிஇ கிட்-ஐ திருடிய நபர்.
நாக்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவர், குடித்து விட்டு வடிகாலில் விழுந்து காயமடைந்துள்ளார். இவர் ஆரம்ப சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் நாக்பூரின் மாயோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், இவர் மருத்துவமனையில் இருந்து ரெயின் கோட் என நினைத்து, பிபிஇ கிட்-ஐ திருடியுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இவர், பிபிஇ கிட்-ஐ தனது நண்பர்களிடம் காண்பித்து, இது ரெயின் கோட் என்றும், இதனை ரூ.1,000-க்கு வாங்கினேன் என்றும் கூறியுள்ளார்.
இது ரெயின்கோட் அல்ல, பிபிஇ கிட் என்பதை கவனித்த மக்கள் , அப்பகுதியின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அவரிடம் இருந்து பிபிஇ கிட்-ஐ பறிமுதல் செய்து எரித்தனர்.
அதன்பின், அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முடிவுகள் நேர்மறையாக வந்தது. பின் அவரது, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்தனர். அவர்களுக்கு மேற்கொண்ட சோதனையில் முடிவுகள் எதிர்மறையாக தான் வந்ததாக கூறப்படுகிறது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…