தாக்குதல் நடத்தியவர்களை 24 மணி நேரத்திற்குள் என்கவுண்டர் செய்த பாதுகாப்பு படை.!

Published by
murugan

கக்கபோரா பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கக்கபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடைபெற்றது. இதில், மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

இந்த சமப்வத்தின் போது  இஷ்ரத் ஜான் (25), குலாம் நபி தார் (42) ஆகிய இரண்டு பேர்  காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகளிடமிருந்து வெடிமருந்து குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.  கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் நேற்று பாஜக தலைவர் அன்வர் கானை கொல்ல முயற்சி செய்தவர்கள் என கூறப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் அன்வர் கானை கொல்ல நேற்று பயங்கரவாதிகள் அவரின் வீட்டில் நுழைய முயன்றனர். அப்போது, வீட்டின் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி பயங்கரவாதிகளை தடுத்தபோது, அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த காவலாளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காவலாளி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #Encounter

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago