Union Minister L Murugan [File Image]
டெல்லி: புதிய நாடாளுமன்றம் துவக்க நாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.சவுத்ரி கூறுகையில், மக்களவையில் செங்கோல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக ஆட்சியில் செங்கோலை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார்.
செங்கோல் குறித்து பல்வேறு உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.சவுத்ரிக்கு தமிழ் கலாச்சாரம் பற்றி தெரியாது. அவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது. அவருக்கு தமிழ் செங்கோலின் மதிப்பு தெரியாது.
செங்கோல் அனைவருக்கும் சமநீதியை பிரதிபலிக்கிறது. செங்கோல் நியாயமான அரசாங்கத்தை பிரதிபலிக்கிறது. நமது பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் செங்கோலை மக்களுக்கு அடையாளம் காட்டி புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார். புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. I.N.D.I.A கூட்டணி மக்களின் செங்கோலை மதிப்பதில்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…