உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2 வது உயரமான சிவன் சிலை…!

Published by
Edison
  • கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற முருதேஸ்வரா கோவில் அருகே உள்ள சிவன் சிலையானது,உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2 வது உயரமான சிவன் சிலையாக உள்ளது.
கர்நாடக மாநிலம்,உத்தரகன்னடா  மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் முருதேஸ்வரா கோவில் உள்ளது.இதன் சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலின் 3 பகுதிகளையும் அரபிக்கடல் சூழ்ந்துள்ளது.
இந்த கோவிலானது சிவபெருமானுக்காக கட்டப்பட்டது.இதில், 20 அடுக்குகள் கொண்ட அதாவது,249 அடி உயர ராஜகோபுரம் உள்ளது.இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது.
இந்த கோவிலானது ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மேலும்,இந்த கோயிலில் உள்ள லிங்கம்,உண்மையான ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதியாக நம்பப்படுகிறது. இந்த லிங்கமானது தரைமட்டத்தில் இருந்து கீழே 2 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல்,இந்த கோவிலின் அருகே 123 அடி உயரத்தில் ஒரு பிரமாண்டமான சிவன் சிலை உள்ளது.இந்த சிலையானது,உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.
இதன்காரணமாக,இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள்,ஆன்மிகவாதிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இக்கோவிலில்,காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும்.ஆனால்,தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.
Published by
Edison

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

26 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

59 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

1 hour ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago