300 பாம்புகளை பிடித்தவரின் உயிரை பறித்த பாம்பு..! நடந்தது என்ன..?

Published by
லீனா

கர்நாடக மாநிலத்தில் 300 பாம்புகளை அசால்டாக பிடித்த நபர் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொடிஹாலா  மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எங்கு பாம்பு பிடிக்க வேண்டுமென்றாலும், பசவராஜை தான் அணுகுவர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குள் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பை பிடிப்பதற்காக பசவராஜ் அழைத்துள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானமின்றி இருந்த நிலையில் பாம்பை பிடிக்க மறுப்பு தெரிவிக்காமல், அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து ஐந்தரை அடி நீளமுள்ள விஷப் பாம்பை லாவகமாக படித்துள்ளார் ஆனால் பாம்பை பிடித்தவுடன் அதை பத்திரமாக காட்டிற்குள் விடாமல் பிடித்த பாம்பை கையில் வைத்து அங்குள்ள மக்களிடம் வேடிக்கை காட்டியுள்ளார். அப்போது அந்த பாம்பு அவரை ஐந்து முறை கடித்துள்ளது. இதனால் விஷம் உடல் முழுவதும் பரவி ரத்தத்தில் கலந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது திறமையால் 300 விஷப் பாம்புகளை பிடித்து பசவராஜ் போதையில் அலட்சியமாக செயல்பட்டதால் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

27 minutes ago

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

59 minutes ago

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

12 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

12 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

15 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

15 hours ago