பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத் வருகை!

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத் வருகை.
மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த அமர்நாத் யாத்திரையை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக ராணுவ அதிகாரி பிரிகேடியர் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவு துறை வழியாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றும், ஆனால் அதனை முறியடிக்க திறனும், படைபலமும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஜ்நாத் சிங் இரண்டு நாள் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்ட நிலையில்,பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அமர்நாத்க்கு வருகை தர உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025