#BreakingNews: புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு – ஒரே நாளில் 20 பேருக்கு பாதிப்பு

The total number of cases infected with the new strain of the novel Coronavirus first reported in the UK now stands at 58.

நாடு முழுவதும் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்வு உயர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.எனவே இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு புதிய உருமாறிய தொற்று உறுதியானால் மத்திய அரசே முதலில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது.அந்த வகையில் இன்று புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்வு உயர்ந்துள்ளது.இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் எடுக்கப்பட்ட சோதனையில் ஒரே நாளில் 20 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட சுகாதார மையங்களில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.