Categories: இந்தியா

கேரளா ஸ்டோரி படத்திற்கு ஏன் தடை.? உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்த மேற்கு வங்கம் மற்றும் தமிழகம்.!

Published by
மணிகண்டன்

கேரளா ஸ்டோரி படத்திற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டுள்ளது என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. தமிழக அரசும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. 

தி கேரளா ஸ்டோரி எனும் பாலிவுட் திரைப்படமானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட மறுத்துவிட்டனர்.

இந்த தடைகளை எதிர்த்து தி கேரளா ஸ்டோரி படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. மேற்கு வங்கத்தில் அரசின் தடையை நீக்க கோரியும், தமிழகத்தில் மறைமுக தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் படத்தயாரிப்பாளர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு குறித்து விளக்கம் அளித்த மேற்கு வங்க அரசு, தி கேரளா ஸ்டோரி படம் உண்மைகளை திரித்து கையாண்டுள்ளது. வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அப்படத்தில் உள்ளன. வகுப்புவாத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தின் காட்சிகள் உள்ளன. இந்த கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும். எனவும்,

இந்த காரணங்களால், மேற்கு வங்க சினிமா ஒழுங்குமுறைச் சட்டம் 1954ன் பிரிவு 6(1)ன் கீழ் திரைப்படத்தின் பல காட்சிகளில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுக்கள் இருப்பதாக எங்களுக்கு கிடைத்த உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் இந்த படத்தை மாநிலத்தில் தடை செய்துள்ளோம் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இதனை அடுத்து , மறைமுக தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக அரசு , படத்தின் விமர்சனம், தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இல்லாதது, மோசமான நடிப்பு, பார்வையாளர்களின் வரவேற்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் திரையரங்கு உரிமையாளர்கள் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட விரும்பவில்லை என்றும், மறைமுக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்த வழக்கு குறித்து ஏற்கனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, நாட்டின் பிற பகுதிகளில் ஓடும் திரைப்படத்தை மேற்கு வங்க மாநிலம் ஏன் படத்தைத் தடை செய்கிறது. பொதுமக்கள் பார்க்கத் தகுந்தது அல்ல என்று எப்படி தீர்மானித்தீர்கள்? என்று மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இரு மாநில விளக்கங்களையும் அடுத்து இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்பட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

38 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago