உலக அமைதி வேண்டி ராஜஸ்தானை சேர்ந்த சுபியா (33 )இவர் காஷ்மீரிலிருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சார்ந்த சுபியா இவர் தடகள வீராங்கனை.இவர் இந்தியா விமான துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் உலக அமைதி , மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியாகவும் ,காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ஓட்டப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து தேசிய கொடியை ஏந்தியபடி ஓட்டத்தில் தொடங்கி தினமும் 50 கிலோ மீட்டர் வீதம் 14 மாநிலங்களை கடந்து 100 நாள்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரியை கடக்கலாம் என சுபியா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே 90 நாள்களில் ஆயிரத்து 4,035 கிலோமீட்டர் கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.சுபியாவின் ஓட்டப் பயணத்துக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தடகள சங்கத்தினர் அந்தந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் செய்திருந்தனர்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…