உலக அமைதி வேண்டி ராஜஸ்தானை சேர்ந்த சுபியா (33 )இவர் காஷ்மீரிலிருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சார்ந்த சுபியா இவர் தடகள வீராங்கனை.இவர் இந்தியா விமான துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் உலக அமைதி , மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியாகவும் ,காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ஓட்டப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து தேசிய கொடியை ஏந்தியபடி ஓட்டத்தில் தொடங்கி தினமும் 50 கிலோ மீட்டர் வீதம் 14 மாநிலங்களை கடந்து 100 நாள்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரியை கடக்கலாம் என சுபியா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே 90 நாள்களில் ஆயிரத்து 4,035 கிலோமீட்டர் கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.சுபியாவின் ஓட்டப் பயணத்துக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தடகள சங்கத்தினர் அந்தந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் செய்திருந்தனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…