உலக அமைதி வேண்டி 90 நாளில் 4,035 கீ.மீ தூரம் ஓடி வந்த இளம்பெண்!

Published by
murugan

உலக அமைதி வேண்டி ராஜஸ்தானை சேர்ந்த சுபியா  (33 )இவர் காஷ்மீரிலிருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சார்ந்த சுபியா இவர் தடகள வீராங்கனை.இவர் இந்தியா விமான துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் உலக அமைதி , மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியாகவும் ,காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ஓட்டப் பயணம் மேற்கொண்டார்.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து தேசிய கொடியை ஏந்தியபடி ஓட்டத்தில் தொடங்கி தினமும் 50 கிலோ மீட்டர் வீதம் 14 மாநிலங்களை கடந்து 100 நாள்களில்  4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரியை கடக்கலாம் என சுபியா திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே 90 நாள்களில் ஆயிரத்து 4,035  கிலோமீட்டர் கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.சுபியாவின் ஓட்டப்  பயணத்துக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தடகள சங்கத்தினர் அந்தந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் செய்திருந்தனர்.

Published by
murugan

Recent Posts

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

23 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

1 hour ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago