Categories: இந்தியா

ரூ.2,000 நோட்டுகளை செலுத்த கட்டுப்பாடு இல்லை.. இதற்கு மட்டும் கட்டுப்பாடு – வங்கி அதிகாரிகள் விளக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், வங்கி அதிகாரிகள் விளக்கம்.

ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போர் தங்களின் வங்கி கணக்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் தங்கள் சேமிப்பு கணக்கு மட்டுமின்றி, வங்கி கடனை திருப்பி செலுத்தவும் கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட், இதர பணபரிவர்தனைகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.  அதிகபட்சம் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி கொள்ளலாம் என்றுள்ளனர்.

வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவர் ரூ.2,000 பதிப்பிலான 10 தாள்களை மட்டுமே மாற்ற அனுமதி வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக மாற்றி கொள்ள மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாள் ஒன்றுக்கு 10 நோட்டுகள் வீதம் ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக பெற முடியும்.

தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் செப்.30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago