திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் – காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார்

Published by
லீனா

பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் வீட்டின் அருகே கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மூவரும் கடையில் இருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார், இந்த மூவரும், லஷ்கர் -ஏ-தொய்பா பயங்கரவாதிகளால் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவர் இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த பின் ஐஜி விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகள் வாசிம் பாரியின் குடும்பத்தை உன்னிப்பாக கவனித்து தான் பயங்கரவாதிகள் இந்த கொலையை செய்துள்ளனர். இங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்கும் போது, லஷ்கர் -ஏ-தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதியையும், உள்ளூரை சேர்ந்த அபித் என்ற பயங்கரவாதியையும்  அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை காவல்துறை, ராணுவம் மற்றும் சிபிஆர்எஃப் அடங்கிய குழு விரைவில் சுட்டுத்தள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த காவலர்கள் தான் அலட்சியமாக இருந்துள்ளனர். எனவே, பாதுகாப்பில் இருந்த 10 காவலர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago