இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே பிறந்த தினம் …!

Published by
Edison

ஜூலை 19 ஆம் தேதியான இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே பிறந்த தினம். 

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய வீரர்களில் ஒருவரான மங்கள் பாண்டே 1827 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.அதன்படி,இன்று அவருடைய பிறந்த தினம் ஆகும்.

பாண்டே 1849 இல் பிரிட்டிஷின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது 22 வது வயதில் இணைந்து 34 வது பிரிவில் பணிபுரிந்தார். அதன்பின்னர்,பிரிட்டிஷின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து 1857 இல் இந்தியக் கலகம் அல்லது சிப்பாய்க் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இவர் இருந்தார்.

சிப்பாய்க் கலகமானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் தட்டி எழுப்பி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடுங்க வைத்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக அமைந்தது.இதனால்,இதைப் பற்றிய உண்மையான தகவல்களை மறைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பெருமளவு முயற்சி செய்தது.

அந்த வகையில்,1857 இல் நடந்த சிப்பாய் கலகம் என்ற புரட்சியை ‘இந்திய சுதந்திரப் போர்’ என்று அழைக்கக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து,பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் பாண்டே கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால்,இவர் தனது 29 வயதில் 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

இதனையடுத்து,இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியில் அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்தது. மேலும்,மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் “மங்கள் பாண்டே – தி ரைசிங்” என்ற திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago