டெல்லியில் இன்று 40 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5,401 ஆக உயர்வு.!

டெல்லியில் இன்று 3,037 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,82,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 40 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,401 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இன்று 3,167 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,50,613 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 26,738 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025