இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

Authorities say two militants were shot dead by border guards as they tried to infiltrate the Indo-Pakistani border in Punjab.

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 தீவிரவாதிகள் எல்லைப்பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலம் அத்தாரி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதற்கு தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவ முயன்ற 2 பேரை சுட்டுக்கொன்று துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் எல்லை பாதுகாப்பு படையினர். மேலும் அப்பகுதிகளில் தேடுதல் பணியில் கூடுதல் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.