உத்தரபிரதேச அரசால் அண்மையில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தின் கீழ், ஒவைசி அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை, திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதை தடுக்க , பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்தது.இந்த சட்டத்தின்படி,திருமணத்திற்காக ஒரு நபரை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது.அவ்வாறு ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருமணத்திற்குப் பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆகவே யோகி அரசு ,மதமாற்ற தடை அவசர சட்டத்தை அண்மையில் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்திற்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபன் படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் ,உ.பி காவல்துறையினர் முதல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.ஒவைசி அகமது என்பவர் மீது பரேலியில் உள்ள தியோரானியா காவல்துறையினர் வேறு மத பெண்ணை மதம் மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவை அச்சுறுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…