வேண்டுமென்றே மோடியால் போடப்பட்ட ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தெலுங்கானாவினை பூர்விகமாக கொண்ட ஐஸ்வர்யா எனும் மாணவி டெல்லியில் கல்லூரி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மனமுடைந்த நிலையில் இருந்த அவர், தனது படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர், கடந்த 2 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மோடி வேண்டுமென்றே போட்ட நாடுமுழுவதுமான ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…