பிரிட்டனில் படித்து வந்த விகாஸ் துபேயின் மகனிடம் போலீசார் விசாரணை.!

Published by
மணிகண்டன்

கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 60 வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடியான விகாஸ் துபே. உத்திர பிரதேச போலீசார் இவரை பிடிக்க சென்றபோது, 8 காவலர்களை சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், விகாஸ் துபேவை கைது செய்தனர். பின்னர் அவரை கான்பூர் கொண்டு செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்பியோட முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொண்டனர்.

பின்னர், அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் விசாரித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். மூத்த மகன் ஆகாஷ் துபே பிரிட்டனில் மேற்படிப்பு படித்துவந்துள்ளார். அவர் தற்போது, ஊரடங்கு காரணமாக  லக்னோவில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாட்டி வீட்டில் தங்கி இருந்த விகாஸ் துபேயின் மகன் ஆகாஷ் துபேயிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மிகவும் பதட்டமாக காணப்பட்டாராம். தனது தாயை பற்றி மட்டுமே அதிகமாக போலீசாரிடம் கேட்டறிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு ஆகாஷ் துபே மிகவும் பதட்டமாக இருந்ததால் சரிவர பதில் கூறவில்லை எனவும் கூறப்படுகிறது.

உத்திர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஷ் துபே, பல்வேறு நகரங்களில் கோடிக்கணா மதிப்புள்ள சொத்துக்களை தனதுடமையாகியுள்ளார். நில அபகரிப்பு மூலமாக மட்டுமே வருடம் சுமார் 10 கோடி சம்பாதித்து வந்துள்ளாராம். மேலும், நில அபகரிப்புக்கு மட்டுமே சுமார் 100 அடியாட்களை விகாஸ் துபே வேலைக்கு வைத்திருந்தாராம்.

விகாஷ் துபே மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் பெயரில் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

30 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

46 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago